சென்னை விமான நிலையத்தில் 5, 10வது வாயில்கள் மூடப்பட்டதால் பயணிகள் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், 5 மற்றும் 10 வது நுழைவு வாயில்கள் மூடப்பட்டதால், பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று காலை, பயணிகள் புறப்பாடு பகுதியில் உள்ள 5 மற்றும் 10 வது நுழைவு வாயில்கள்  எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டது. இதனால், துபாய், லண்டன், கொழும்பு, அபுதாபி உள்பட  பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகள், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. மேலும் அங்கு பணியில் இருந்த  மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு  இந்தி மட்டுமே தெரிந்ததால், பயணிகள் அவதியடைந்தனர்.

Night
Day