சென்னை வேளச்சேரி - அரசுப் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேளச்சேரி பகுதியை சேர்ந்த முருகேசன் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் இருந்து கிண்டி நோக்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறிய அவர், கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சாலையின் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்கள் சாலை பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்ததில் நித்தியா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தரமற்ற சாலைகளினால் தொடர் விபத்துகள் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day