சென்னை - ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 58 ஆயிரத்தை கடந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது. சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்தவகையில், ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று 320 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day