சென்னை - கோயம்பேடு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதோடு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

சென்னையின் நகர்ப்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு செல்லும் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கியதால் சில்லறை வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது வரை மழைநீர் வடிகால்வாய் பணி தொடங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய வியாபாரிகள், மழைநீருடன் கழிவுநீர் கலந்து நோய்தொற்று பரவுவதாக வேதனை தெரிவித்தனர்.

Night
Day