சென்னை : குழந்தை கடத்தல் வதந்தி - வடமாநில நபருக்கு தர்ம அடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வியாசர்பாடி அருகே குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாகக்கூறி வட மாநில நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி சஞ்சய் நகரை சேர்ந்த வேலு-தீபா தம்பதியினரின் 6 வயது மகன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அடையாளம் தெரியாத வடமாநிலத்தை சேர்ந்த நபர், 6 வயது மகனை கடத்த முயன்றதாக கூறி வேலு, தீபா மற்றும் பொதுமக்கள் சிலர் அந்நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day