சென்னை : சுற்றுலா பொருட்காட்சியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

ஜனவரி 12 ஆம் தேதி முதல் தீவுத்திடலில் பொருட்காட்சி நடைபெற்று வரும் நிலையில், நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 40 ரூபாயும் சிறியவர்களுக்கு 25 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ராட்டினங்கள், டிராகன் போட், சிறுவர்களுக்கான சிறிய இரயில்கள், மரண கிணறு உள்ளிட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இவற்றிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. நுழைவு கட்டணத்தை குறைவாக வைத்துவிட்டு விளையாட்டுகளின் கட்டணங்களை உயர்த்தி உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Night
Day