சென்னை : பணி நியமன ஆணை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும், அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

varient
Night
Day