சென்னை : 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவான்மியூரில் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை, 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருவான்மியூரை சேந்த 7 முதல் 10 வயதுடைய மூன்று சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அந்த மர்மநபர், கடந்த மாதம் 30ம் தேதிக்கு முன்பு மூன்று சிறுமிகளையும், 4ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் மூலம் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சிறுமிகளுக்கு இனிப்புகளை கொடுத்து ஏமாற்றி, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day