சென்னை : 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் - குண்டுகட்டாக கைது செய்த போலீசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தி.நகரில் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு வேலைவாய்ப்பில் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், TNPS தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் மாற்றுதிறனாளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை தி.நகரில் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்ய முயற்சிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Night
Day