சென்னை: அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிக்‍காக ஆட்களை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்தில் பழுது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த பாடியநல்லூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்‍காக ஆட்களை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால், அதனை நடத்துநரும், பேருந்தில் சென்றவர்களும் தள்ளிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் விளையாட்டு திடலில், நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்துகொள்வதால், கூட்டத்திற்காக திமுகவினர் அரசுப் பேருந்தில் ஆட்களை அழைத்துச் சென்றனர். ஆனால் பேருந்தின் என்ஜினில் பழுது ஏற்பட்டு, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டதால், ஓட்டுநரும் பேருந்தில் இருந்தவர்களும் அதனை தள்ளிச் சென்றனர். இந்தக்‍ காட்சி அங்கிருந்தவர்கள் இடையே நகைப்பை ஏற்படுத்தியது. 

varient
Night
Day