சென்னை: அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பிராஜெக்ட் டே என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை மத்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் நந்தகோபாலன் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும்போது அடுத்த 5 ஆண்டுகளில் தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்களிடம் இருந்து பெற முடியும் என்றார். 

Night
Day