சென்னை: இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபோது திடீர் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சோழிங்கநல்லூரில் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாவலூரை சேர்ந்த அரவிந்த் என்பவர், பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சோழிங்கநல்லூர் பகுதி அருகே வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் வாகனத்தை ஸ்டார் செய்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. 

Night
Day