சென்னை: உடல் உறுப்பு தானம் செய்த காய்கறி வியாபாரிக்கு அரசு சார்பில் மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்த காய்கறி வியாபாரிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தாம்பரம் மார்க்கெட் பகுதி காய்கறி வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் ராமச்சந்திரன் கணபதிபுரம் ஸ்மித்லைன் பகுதியில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தவறி விழுந்து தலையில் அடிபட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மூளை சாவு அடைந்த அவருடைய உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து , சிறுநீரகங்கள், கல்லீரல், கண் கருவிழி ஆகியவை தானமாக அளிக்கப்பட்டது. உடல் உறுப்புகளை தானம் செய்த ராமச்சந்திரன் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

Night
Day