சென்னை: உணவு பாதுகாப்பு துறை தேர்வில் வென்றவர்கள் குமுறல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி பணஆணை வழங்கக்கோரி டி.எம்.எஸ் வளாகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டு, 2022-ல் தேர்வு நடத்தியபின் முடிவுகள் வெளியிடப்பட்டதாக கூறிய அவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக கூறினர். ஆனால், தற்போது வரை பணி நியமனம் வழங்காமல், மருத்துவ தேர்வு வாரியம் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், தேர்ச்சி பெற்ற 99 பேருக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

Night
Day