சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் உண்ணாவிரதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அகவிலைப்படி நிலுவையை வழங்காத திமுக அரசை கண்டித்து அரசு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்லவன் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் முன்னாள் ஊழியர்கள், ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிலுவை அகவிலைப்படியை வழங்குவதாக கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள் ஆகியும் சொன்னதை செய்யவில்லை என குற்றம்சாட்டினர். 

Night
Day