சென்னை: காலாவதியான டாடா குளுக்கோ ப்ளஸ் குளிர் பானங்கள் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள கடை ஒன்றில், காலாவதியான டாடா குளுக்கோ ப்ளஸ் குளிர் பானங்கள் விற்கப்பட்டதால் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். குடியரசு தினத்தை முன்னிட்டு நேதாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள சீதக்காதி பள்ளியில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  கலந்து கொண்ட 500 மாணவர்களுக்கு நெல்லை ஏஜென்சி என்ற கடையில் இருந்து டாடா குளுக்கோ ப்ளஸ் வாங்கி கொடுக்கப்பட்டது. அப்போது 300க்கும் மேற்பட்ட குளிர்பானங்கள் காலாவதியானதை கண்டு பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

Night
Day