சென்னை: சாலையின் நடுவே உள்ள தடுப்பு கற்களில் லாரி மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மணலி புதுநகர் அருகே சாலை நடுவே போடப்பட்ட தடுப்பு கற்களின் மீது ட்ரைலர் லாரி மோதி கண்டைனர் பெட்டி கீழே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணலி எம்.எஃப்.எல். சந்திப்பு முதல் மீஞ்சூர் வரையிலான சாலையின் நடுவே தடுப்பு கற்கள் போடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரைலர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மணலி புதுநகர் ஆண்டார்குப்பம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது. இந்நிலையில், மறியல் போராட்டம் கைவிடப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அதே கற்களில் ட்ரெய்லர் லாரி மோதி கண்டெய்னர் பெட்டி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் மீஞ்சூர்-சென்னை துறைமுகம் செல்லும் சாலையில் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது. சாலையின் நடுவே உள்ள தடுப்பு கற்களில் இருசக்‍கர வாகனங்கள் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் லாரிகள் இயக்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

Night
Day