சென்னை: சாலையில் அமர்ந்து பிரார்த்தனை செய்தவாறு கிறிஸ்தவர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பல்லாவரம் அருகே சிலுவைப்பாதை ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், கிறிஸ்தவ மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரிசூலம் மலைமேல் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் வருடா வருடம் புனித வெள்ளி தினத்தை ஒட்டி, சிலுவை பாதை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தேவாலயத்தில் இருந்து புறப்பட்ட சிலுவை பாதை பவனிக்கு, தேர்தல் நேரம் எனக்கூறி பல்லாவரம் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மக்கள் சாலையில் அமர்ந்து பிரார்த்தனை செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

varient
Night
Day