சென்னை: டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தரமணியில் டாஸ்மாக் கடையில் மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதை தட்டிக்கேட்ட இளைஞரிடம் விற்பனையாளர் அலட்சியமாக பதில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. தரமணி 100 அடி சாலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் இளைஞர் ஒருவர் விற்பனையாளரிடம் 200 ரூபாயை கொடுத்து ஒரு குவார்ட்டர் மதுபாட்டில் கேட்டுள்ளார். விற்பனையாளர் மதுபாட்டிலை கொடுத்துவிட்டு 10 ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். இதற்கு மதுபிரியர் எம்.ஆர்.பி. 180 ரூபாய் போட்டுள்ளதால் 10 ரூபாய் தான் கொடுத்துள்ளீர்கள், மீதி 10 ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பணம் மதுபாட்டில்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் கூலி என அலட்சியமாக கூறியுள்ளார். 

Night
Day