சென்னை: திருமண வீட்டாரை தகாத வார்த்தைகளால் திட்டிய பெண் உதவி ஆய்வாளர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பட்டாபிராமில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனரை போலீசார் அகற்ற சொல்லி தகாத வார்த்தைகளால் திருமண வீட்டாரை திட்டும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பட்டாபிராம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேஜா என்பவருக்கும் பட்டாபிராம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக மணமக்களை வாழ்த்தி அவர்களின் நண்பர்கள் ஆங்காங்கே பேனர்கள் வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த போலீசார் பேனர்களை அகற்றுமாறு தெரிவித்தனர். இதனால் திருமண வீட்டாருக்கும் போலீசாருக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் பெண் உதவி ஆய்வாளர் வசந்தி தினேஷை வலுகட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Night
Day