சென்னை: பக்கிங்காம் கால்வாயில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவல்லிக்கேணி பக்கிங்காம் கால்வாயில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.  திருவல்லிக்கேணி‌ பகுதியிலுள்ள பக்கிங்காம் கால்வாய் மிகவும் பழமையான கால்வாய்களில் ஒன்று. இக்கால்வாயில் முறையான பராமரிப்புகள் இல்லாத காரணத்தினால், கால்வாய் முழுவதுமாக பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவு நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை ஏற்படுவதால் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Night
Day