சென்னை: பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தும் முன்பு கைது செய்த போலீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த விடுதிகளில் தங்கி இருந்த மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டில் ஒரு விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்றும் போராட்டம் நடத்த திட்டமிட்டு கோடம்பாக்கம் அரசினர் விடுதி உட்பட பல்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். அவர்களை போலீசார், இன்று அதிகாலை விடுதிகளுக்குள் சென்று கைது செய்தனர். போலீசாரின் இந்த அராஜக செயலுக்கு மாற்றுத்திறனாளி சங்ககங்கள் கண்டங்கள் தெரிவித்துள்ளன.

Night
Day