சென்னை: போராட்டம் நடத்திய ஆசிரியர்களை கைது செய்த போலீசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி இடைநிலை பதிவு ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி 3வது நாளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள சமூக நலக்கூடங்கள் தங்க வைத்துள்ளனர். 

Night
Day