சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் அணிவகுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பை மேற்கொண்டனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொரு மாநிலத்துக்கும் துணை ராணுவ படையினர் அனுப்பப்பட்டு உள்ளனர். அந்த வகையில் தமிழகத்துக்கு 25 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். இந்நிலையில், கே.கே.நகரில் உள்ள ராணி அண்ணா நகர் குடியிருப்பு முழுவதும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்தியபடி துணை ராணுவப்படையினர் அணிவகுப்பை நடத்தினர். இவர்களுடன் உள்ளூர் போலீஸாரும் கலந்து கொண்டனர்.

Night
Day