சென்னை: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வியாசர்பாடியில் போக்குவரத்து போலீசாருக்கு மது போதையில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனர் ஒரு மணிநேரமாக போக்குகாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கணேசபுரம் சுரங்க பாதை  அருகே ராஜன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த பிரகாஷ் என்பவர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் மது அருந்தியுள்ளாரா என பிரீத் அனலைசர் கருவி மூலம் கண்டறிய போலீசார் முயன்றனர். ஆனால், ஆட்டோ ஓட்டுனரோ ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த கருவியில் பொருத்தியுள்ள குழாயை உரிவதும், கடிப்பதுமாக போக்கு காட்டினார். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அவர் மது குடித்ததை உறுதி செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுனருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Night
Day