சென்னை: மின்வயரில் ஏணி உரசியதில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தி.நகரில் அலுமினிய ஏணியை தள்ளி சென்ற இருவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். தி.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்றது. இதில் ஊழியர்கள் 25 அடி உயரம் கொண்ட அலுமினிய ஏணியை பயன்படுத்தி உள்ளனர். ஏணியை குடியிருப்பின் பின் பகுதிக்கு தள்ளி சென்றபோது, மேல்புற முனை மின்வயரில் உரசியுள்ளது. அப்போது மின்சாரம் தாக்கியதில் நாராயணன், சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற பாண்டிபஜார் போலீசார், உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

Night
Day