சென்னை: மீன் பிடிக்கச்சென்ற நபர் ஏரி நீரில் மூழ்கி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஆவடி அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், உடன் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆவடி வேல்டெக் சீனிவாசா நகரைச் சேர்ந்த வளர்த்தீஸ்வரன், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பழனிவேலுவுடன் அருகில் உள்ள வெள்ளானூர் ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அங்கு இருவரும் மதுஅருந்திய நிலையில் ஏரியின் நடுவில் மீன் பிடிக்கச் செல்வதாகக்கூறி தண்ணீரில் குதித்த வளர்த்தீஸ்வரன் நீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்து சென்ற ஆவடி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு வளர்த்தீஸ்வரனின் சடலத்தை மீட்டனர். இதுகுறிதது, வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் பழனிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day