சென்னை: 16வது நாளாக தொடரும் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், உதவித்தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 16வது நாளாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கல் 100 அடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர். தங்களை வஞ்சித்து வரும் விளம்பர திமுக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day