சேதமடைந்துள்ள சாலைகளால் தினம் தினம் விபத்துகளை சந்திக்கும் நெல்லை மக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் சேதமடைந்து காணப்படும் சாலையால் சரக்கு லாரி விபத்துக்குள்ளாகி, ஆட்டோ மற்றும் பைக் மீது கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் நெல்லையின் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து அரித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் குண்டும் குழியுமான சாலைகளில் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் உள்ள சேதமடைந்த சாலையால், அவ்வழியாக சென்ற சரக்கு லாரி நிலைதடுமாறி, அந்த வழியாக வந்த ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனம் மீதும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2பேர் படுகாயமடைந்தனர். 

Night
Day