சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு - பெண் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் தங்கதுரை. இவருடைய மனைவி வெண்ணிலா கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்திற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மகப்பேறு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர், வெண்ணிலாவிடம் குழந்தையின் கண்கள் மஞ்சளாக இருப்பதாக பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் பெற்றோரின் கவனத்தை திசை திருப்பி குழந்தையை அந்த பெண் கடத்தி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில், அரசு மருத்துவமனையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் குழந்தையை பெண் கடத்திச் சென்றது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை தொடங்கிய போலீசார், இன்று அதிகாலை 3 மணியளவில் குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வினோதினி என்பவரையும் கைது செய்தனர்.

Night
Day