சேலம்: கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க எதிர்ப்பு - போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் இடங்கணசாலையில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலையால் மக்களுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும், நகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத நிலையில் 8 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதை கண்டித்தும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாகவும், நிலத்தடி நீர் முழுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Night
Day