சேலம்: பட்டாசு வெடித்த விபத்தில் தீக்காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சர்க்கார் கொல்லப்பட்டியில் குழிஇருசாயி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 12-ம் தேதி வாணவேடிக்கை நடந்து கொண்டிருந்தது. இதற்காக சக்திவேல் என்ற இளைஞர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை வாங்கி வைத்திருந்தார். அப்போது வானத்தில் வெடித்து சிதறிய பட்டாசின் தீப்பொறி ஒன்று பட்டாசு பெட்டியில் பட்டு  வெடித்து சிதறியது . இதில் சக்திவேல் 75 சதவீதம் தீக்காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

varient
Night
Day