சேலம்: பல்லி விழுந்த கேக்கை சாப்பிட்ட பெண்ணுக்கு வாந்தி, மயக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் அருகே பல்லி விழுந்த கேக்கை சாப்பிட்ட பெண் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாகியம்பட்டி பகுதியில் செயல்ப்பட்டு வரும் பேக்கரி ஒன்றில், அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண் கேக் வாங்கி சாப்பிட்டுள்ளார். கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில், முத்துலட்சுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக தம்மம்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் ஆய்வு செய்து, பேக்கரிக்கு சீல் வைத்தனர்.

Night
Day