சேலம்: பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி தர்ணா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். துலுக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டிக்காரன் தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏரிபகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த மூன்று பேர் அந்த பெண்ணை வழிமறித்து சில்மிஷத்தில் ஈடுபட்டதோடு, கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அந்த பெண், ஆத்தூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். 

Night
Day