சேலம்: மின்சாரம் தாக்கி தற்காலிக பணியாளர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய தற்காலிக பணியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோவிந்தன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த தங்கராசு தேவூர் கிளை மின்சார வாரியத்தில், தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். காணியாளன்பட்டியில் மின்கோளாரை சரிசெய்ய சென்ற அவர், மின் கம்பத்தின் மீது ஏறி பழுதுபார்த்தபோது, மின்சாரம் தாக்கியதில் மின்கம்பத்தில் தொங்கியபடியே உயிரிழந்தார். தகவலளித்தும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், அண்ணமார் கோவில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, 5 மணி நேரத்திற்கு பின் தங்கராசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Night
Day