சேலம்: முள்ளுதோப்பில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்‍கு மருத்துவமனையில் சிகிச்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முள்ளு தோப்பில் பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டது. ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள முள்ளுதோப்பு பகுதியில் குழந்தை அழும் சத்தத்தை கேட்ட அப்பகுதி பெண்கள் அங்கு சென்று பார்த்தபோது, ரத்த காயங்களுடன் பிறந்த சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை இருந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த வட்டாட்சியரும், வருவாய் கோட்டாட்சியரும், குழந்தையை மீட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை முள்ளு தோப்பில் வீசிச் சென்றது யார்? என்பது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day