சைக்கிள் சின்னம் கோரிய த.மா.கா மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மனு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில் வரும் மக்களவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கோரி கடந்த 6-ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாக கூறியுள்ளார். அடுத்த 4 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், மனுமீது இன்னும் முடிவெடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது.

Night
Day