சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவு : புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார். 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தென்சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி இமாச்சலப் பிரதேசத்தில் வாகன விபத்து ஏற்பட்டு சட்லஜ் நதியில் விழுந்து காணாமல் போய் 8 நாட்களாக தேடி வந்த நிலையில், தற்போது அவர் இறந்துவிட்டார் என்றும், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

அன்பு சகோதரர் சைதை துரைசாமி, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் என்றும், எங்கள் இயக்கத்தின் நலனுக்காக அயராது பாடுபட்டவர் எனவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தனது மகனை இழந்த இந்த கடினமான நேரத்தில் சைதை துரைசாமிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியையும், மன வலிமையையும் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

தனது மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் சைதை துரைசாமிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day