சொத்துவரி பாக்கி வைத்துள்ள 43 கடைகளுக்கு சீல் !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தியாகராய நகரில் சொத்துவரி பாக்கி வைத்துள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு வருடத்திற்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய சொத்துவரியை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தியாகராய நகர் பகுதிக்கு உட்பட்ட 43 கடைகளில் ஒன்றரை கோடி ரூபாய் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day