சொத்து குவிப்பு வழக்கில் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடைபெறும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் இன்றைக்கு தள்ளிவைத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது. இதனையடுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்றைக்கு தள்ளி வைத்தார். விசாரணை இன்றும், வரும் 29 மற்றும் மார்ச் 5-ம் தேதியும் நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

Night
Day