சோ ராமசாமி மனைவி மறைவு - சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமியின் மனைவி செளந்தரா ராமசாமி மறைவுக்கு, அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமியின் மனைவி செளந்தரா ராமசாமி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். 

மறைந்த சோ.ராமசாமியும் அவரது மனைவி செளந்தரா ராமசாமியும் புரட்சித் தலைவி அம்மா மீது மிகுந்த அன்பையும், மதிப்பையும் கொண்டு இருந்தனர். புரட்சித் தலைவி அம்மா தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளின்போது, மறைந்த சோ ராமசாமி இல்லத்திற்கு நேரில் சென்று, அவர்களிடம் ஆசி பெற்றதையும் இந்நேரத்தில் எண்ணிப் பார்ப்பதாக புரட்சித் தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

அம்மையார் செளந்தரா ராமசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அன்னரது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

varient
Night
Day