ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வழங்க கோரி வழக்கு: ஜல்லிகட்டு விழா கமிட்டி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2-ஆம் இடம் பிடித்த அபிசித்தர் தனக்கு முதல் பரிசு வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில், ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், தான் 18 காளைகளை அடக்கியதால் முதல் பரிசு வழங்க வேண்டுமென 2-ஆம் இடம் பிடித்த அபிசித்தர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தன்னைவிட குறைவாக 17 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக்கிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டதாகவும், பரிசு அறிவிப்பில் குழப்பம் காரணமாக இவ்வாறு நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

varient
Night
Day