ஜூன் 16-ஆம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, வரும் 16ம் தேதி அன்று, சென்னை போயஸ் கார்டனில் உள்ள "ஜெயலலிதா இல்லத்தில்" கழகத் தொண்டர்களை நேரில் சந்திக்‍கிறார்.

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, வருகின்ற 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு, சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள "ஜெயலலிதா இல்லத்தில்" கழகத்தொண்டர்களை நேரில் சந்திக்கிறார்.

புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த கழகத்தொண்டர்கள் அனைவரும் புரட்சித்தாய் சின்னம்மா மீது  வைத்திருக்கும் அளவற்ற அன்பிற்கும், மரியாதைக்கும் எந்த பரிசுப் பொருட்களும் இணையாகாது - எனவே, புரட்சித்தாய் சின்னம்மாவை நேரில் சந்திக்க வரும் கழகத்தொண்டர்கள் பூங்கொத்து, சால்வை, புத்தகங்கள் உள்ளிட்ட எந்தவித பரிசுப் பொருட்கள் அளிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Night
Day