ஜெட் வேகத்தில் விற்று தீர்ந்த தென்மாவட்ட ரயில்களின் டிக்கெட்டுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 29ம் தேதிக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 1ம் தேதி கொண்டாடவுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்போர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவார்கள். அதற்கான, முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் அக்டோபர் 29ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய சில நிமிடங்களிலே விற்றுத்தீர்ந்தன. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான டிக்கெட்கள் ஜெட் வேகத்தில் விற்றுத்தீர்ந்தன. தொடர்ந்து, நாளை அக்டோபர் 30ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவும், நாளை மறுநாள் 31ம் தேதிக்கான டிக்கெட் விற்பனையும் தொடங்குகிறது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஆர்வத்துடன் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்தனர். 

Night
Day