டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென் மாவட்டங்களுக்கு செல்லும் TNSTC பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமெ இயக்கப்படுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 710 டிஎன்எஸ்டிசி பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 160 டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, SETC, ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கதிருந்து இயக்கப்படுகின்றன. ஈசிஆர், பூந்தமல்லி வழியாக செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்படுமென கூறப்பட்டுள்ளது. 

Night
Day