தஞ்சாவூர் வடக்‍கு மாவட்ட கழக நிர்வாகியின் தாயார் மறைவுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் வடக்‍கு மாவட்டத்தைச் சேர்ந்த, கழக நிர்வாகியின் தாயார் மறைவுக்‍கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், வீராக்கண் ஊராட்சி கூத்தனூரை சேர்ந்த கழக தகவல் தொழிநுட்பப் பிரிவு ஒன்றிய செயலாளர் திரு.C.R.D.வீராக்குமாரின் தாயார் D.ரவேந்திரி இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

தாயை இழந்து வாடும் திரு.C.R.D.வீராக்குமாருக்‍கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

varient
Night
Day