தஞ்சாவூர்: அரிசி ஆலை முகவர்கள், தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரிசி ஆலை முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யும் நெல்லை அந்தந்த மாவட்டங்களில் இருப்பு வைக்காமல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். வெளி மாவட்டங்களுக்கு நெல்லை அனுப்பி வைப்பதால் அரவை முகவர்களும், ஆலை தொழிலாளர்களும் பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும், டெல்டா மாவட்டத்தில் நெல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.

Night
Day