தஞ்சாவூர்: 11 ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கிய தனியார் ஐடி நிறுவனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அதன் நிறுவனர் காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். ஹம்சவர்தன் என்ற இளைஞர், தஞ்சையில் 4 பேருடன் ஐடி நிறுவனத்தை தொடங்கிய நிலையில், தற்போது 400 பேர் பணியாற்றும் வகையில் அந்நிறுவனம் வளர்ந்துள்ளது. இதனிடையே தனது நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை கவுரவிக்க நினைத்த ஹம்ச வர்தன், நிர்வாகம், நிதி, மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் 11 பேரை தேர்வு செய்து அவர்களுக்‍கு காரை பரிசாக வழங்கி பாராட்டியுள்ளார். எதிர்பாராமல் கிடைத்த பரிசால் மகிழ்ச்சியில் திளைத்த ஊழியர்களின் குடும்பத்தினர், கார் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Night
Day