தஞ்சை பெரிய கோயில் அகழியில் திடீரென தீ பிடித்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை பெரிய கோயில் அகழியில் பிடித்த தீயை, மாநகராட்சி ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை சுற்றி சிறிய கோட்டை அகழி உள்ளது. இதனை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் இன்றி வறண்டு, கோட்டை சுவர்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் இன்று சோழன் சிலைக்கு பின்புறமுள்ள அகழியில் நிரம்பியுள்ள குப்பைக் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து சென்ற தஞ்சை மாநகராட்சி ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Night
Day