தஞ்சை: ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படியில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் தினந்தோறும் பேருந்துகளில் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day